உள்ளாட்சியில் இளைஞர்கள் பங்களிக்கும் வகையில் சிறப்புப்பணியாற்றும் "இளையதலைமுறை"

கோவை, சோளிங்கர், அள்ளியூர், சென்னை, காஞ்சிபுரம், மேலூர், சமயநல்லூர், சிவகாசி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 9 பகுதிகளில் இருந்து பொதுநலமிக்க இளைஞர்களை ஒன்றுதிரட்டி பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையிலும், உள்ளாட்சியில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் "இளையதலைமுறை" என்னும் அமைப்பு துவங்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.



இக்குழுவினரின் சார்பாக கடந்த 6 மாதங்களாக சோளிங்கர் இளையதலைமுறை சார்பாக மரம் நடுதல் பணி, பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து "நமது வாடும் நமது வீடே" நிகழ்வு துவக்கம், திருவாரூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட 6 விவசாயிகளுக்கு சுமார் 2.3 லட்சம் நிதியுதவி, காகிதபுரம் பகுதியில் இரத்த தான முகாம், மரபணு மாற்று கடுகை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி, கோவை இளையதலைமுறை சார்பாக இரத்த கொடையாளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகள் நடைபெற்றுள்ளது.

மேலும், 5 ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்கு ரூ.80,000 நன்கொடை, ஏழை மாற்று திறனாளி ஒருவருக்கு மெக்கானிக் ஷாப் அமைக்க ரூ. 15,000 நன்கொடை உள்ளிட்ட நிதியுதவிகளும் அளிக்கப்பட்டுள்ளது. 



இதனைத்தொடர்ந்து, இளையதலைமுறை அனைத்து மாவட்ட உறுப்பினர்களின் நான்காம் சந்திப்பு கோவையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சியில் இளைஞர்களின் பங்கு குறித்து செந்தலை கௌதமன் மற்றும் சமூக களப்பணியில் ஊடகங்களின் பங்கு குறித்து விஸ்வா விஷ்வநாத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அததைத்தொடர்ந்து, கடந்து 6 மாதத்தில் இளையதலைமுறை அமைப்பில் சிறப்பாக செயல்பட்ட களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டது.



Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...